செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர்
செம்மங்குடி சீனிவாச ஐயர் - தமிழ்நாட்டைச் சேர்ந்த கர்நாடக இசைப் பாடகரான இவர் தனது மாணாக்கர்களால் "செம்மங்குடி மாமா" என அன்போடு அழைக்கப்பட்டவர்.
பிறப்பு: சூலை 25, 1908
இடம்: திருக்கோடிக்காவல், தஞ்சாவூர் மாவட்டம் , தமிழ்நாடு
பணி: கர்நாடக இசைப் பாடகர்
இறப்பு: அக்டோபர் 31, 2003
ஆரம்ப வாழ்க்கை
தமிழ்நாட்டில் , தஞ்சாவூர் மாவட்டம் , திருவிடைமருதூர் வட்டம் திருக்கோடிக்காவல் என்னும் ஊரில் ராதாகிருஷ்ண ஐயர் தர்மசம்வர்தினி அம்மாள் தம்பதியினருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். தனது பெரியப்பா மகன் செம்மங்குடி நாராயணசுவாமி ஐயரிடம் தனது எட்டு வயது முதலே இசை கற்கத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து திருவிடைமருதூர் சகாராமா ராவ், உமையாள்புரம் சுவாமிநாத ஐயர், நாராயணசுவாமி ஐயர் இறுதியாக மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் ஆகியோர்களிடமும் இசையை கற்றுத் தேர்ந்தார்.
இசை வாழ்க்கை
1926 ஆம் ஆண்டு இவரின் முதல் இசை நிகழ்ச்சி கும்பகோணத்தில் அரங்கேற்றியது. 1927 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸின் மாநாட்டில் இவர் பாடியதைத் தொடர்ந்து பெரும்புகழடையத் தொடங்கினார். திருவனந்தபுரத்தில் சுவாதித்திருநாள் இசைக் கல்லூரியில் 23 ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்தார். அதன்பிறகு, அகில இந்திய வானொலியில், சென்னை கர்நாடக இசைப்பிரிவின் முதன்மைத் தயாரிப்பாளராக 1957 - 1960 வரை பணியைத் தொடர்ந்தார். அதன்பிறகு மேடைகளில் பாடுவதிலும், பல இளம் தலைமுறைகளுக்கும், கலைஞர்களுக்கும் கற்பிப்பதிலேயே முழு கவனம் செலுத்தினார். தனது 92 ஆவது வயது வரை மேடைகளில் பாடினார்.
சிறப்புகள்
தனது 39 ஆவது வயதில் இவர் சங்கீத கலாநிதி விருதினை பெற்றார். இவ்விருது பெற்ற இளம் கலைஞர் எனும் பெருமை இவருக்கு உண்டு. இதில் மற்றுமொரு முக்கியமான தகவல்: இவரின் குரு மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் அதற்கு முந்தைய ஆண்டு தான் 'சங்கீத கலாநிதி' விருதினை பெற்றிருந்தார்.
![]() |
சங்கீத நாடக அகாடமி விருது ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் அவர்களிமிருந்து பெற்ற பொழுது |
விருதுகள்
- 1947ம் ஆண்டு சென்னை மியூசிக் அகாடமி இவருக்கு சங்கீத கலாநிதி விருது வழங்கி கௌரவித்தது.
- 1953ம் ஆண்டு சங்கீத நாடக அகாதமி விருது பெற்றார்
- இந்தியாவின் உயர்ந்த விருதுகளான பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூசண் விருதுகளை பெற்றார்
- 1969ம் ஆண்டு தமிழ் இசைச்சங்கம் இசைப்பேரறிஞர் விருது, வழங்கி கௌரவித்தது
- மத்திய பிரதேச (இந்திய மாநிலம்) அரசு காளிதாஸ் சம்மன் விருதினை வழங்கி கௌரவித்தது
- கேரளா அரசு 1979ம் ஆண்டு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியது
- தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி சங்கீத கலாசிகாமணி விருது, 1974 & 1991; வழங்கியது
No comments:
Post a Comment